top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Annamalai CT - India

Entry No: 

349

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதலியே காதலியே….

மயில் இறகாய்...
மயில் இறகாய்...
என் காதலியே
நீ மயில் இறகாய்..........

உன்னை விட்டு விட்டு விட்டுஎங்கு நானும் போவேனோ
காதலி உந்தன் கை பிடிக்க பின்னால் வருவேனோ
நீ இல்லை இல்லை இல்லையென்றால் சாக தோனுதே
ரோஜா பூக்கள் முழுதும் மலர் வளையமாகுதே..........

காதலியே காதலியே
மயில் இறகாய் என் காதலியே.............

நாம் வாழும் நாட்கள்
எவ்ளோ என்று தெரியவில்லையே
அதையே எண்ணி வாழ்க்கையை தொலைக்க
நானும் விரும்பவில்லையே
நீ போகும் தூரம் தூரமென்றாலும் கவலையில்லையே
என் வாழ்வும் சாவும் உன்னோடு தான் தெரியவில்லையா??

காதலியே காதலியே
என் உயிர் மூச்சாய் நீதான்டியே......

சாகும் போது கொண்டு செல்ல ஒன்றுமில்லையே
என் காதலை சுமந்து கொள்ள நீ தான் புள்ளையே

காதலியே என் காதலியே....

உன்னோடு நான் வாழ்ந்த நாட்களெல்லாம்
என் கண் முன்னே வந்து வந்து செல்லுதடி
உன்னோடு நான் சிரித்த நொடிகளெல்லாம்
இப்போது கண்ணீராய் வழியுதடி

காதலியே.......
காதலியே........
மயில் இறகாய்...
மயில் இறகாய்...
என் காதலியே நீ மயில் இறகாய்..........
உன்னை விட்டு விட்டு விட்டுஎங்கு நானும் போவேனோ
காதலி உந்தன் கை பிடிக்க பின்னால் வருவேனோ
நீ இல்லை இல்லை இல்லையென்றால் சாக தோனுதே
ரோஜா பூக்கள் முழுதும் மலர் வளையமாகுதே..........
காதலியே!!
என் காதலியே!!!!!

உன் மனதோடு என் மனம் சேர்க்க....
உன் விரலோடு என் விரல் கோர்க்க....
அந்த நொடிக்காக என் மனம் முழுக்க
அலைபாயுதே...
என் கண்மணியே........
அதை கலைத்து விடாதே...
என் காதலியே........


காதலியே காதலியே
மயில் இறகாய் என் காதலியே.................


இப்படிக்கு
அண்ணாமலை

bottom of page