top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
ANBUCHELVI SUBBURAJU - India
Entry No:
257
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அங்குமிங்குமாய் ஓடியாடி
தாகம் கொண்ட மேகத்தின்
வேக உறிஞ்சலுக்கு
ஈடு தரும் கடலலைகளில்...
வளர்ந்து தேய்ந்து
காலப் பரிமாண
நிகழ்வுகளின் குறியீடாக
வெண்ணிலவைச் சுற்றி
ஒளிரும் சுடரலைகளில்...
வீழும் மழைத்துளிகளை
ஆதவனின் கரம்
தீண்டிடச் சிதறிய
வானவில்லின் வண்ணங்களில்...
வாசமுடன் பூத்து
இதழ் விரியச்
சிரிக்கும் மலர்களில்...
விடியல் பொழுதினைக்
கட்டியமிட்டு வரவேற்கும்
பறவைகளின் இன்னிசையில்...
வருணனின் வருகையால்
ஆனந்தம் மேலிடத்
தோகை விரித்தாடும்
மயில்பீலியின் இடையினில் ...
உன்னுடனேயே ஒன்றெனக்
கலந்திருக்கும் என்னை அறியாது
முடிவுறாத் தேடலாகத் தொடருகிறாயே
உன் பயணத்தை...
அன்புச்செல்வி சுப்புராஜூ
bottom of page