INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
AGNI PRADEEP - India
Entry No:
201
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அரபிக்கடலோரத்தில்
அயர்ந்து உறங்கியதில்
அலையலையாய்
வந்ததோர் அரேபியக்குரல்.
கரையில் கிடந்த என்னிடம்
புரியாத மொழியில்
கதைத்துப் போனது
என்னை முழுவதும்
நனைத்துப் போனது
நனைத்ததில் துய்த்தபோதே
விழித்தேன் உயிர்த்தேன்
இந்த இன்பம் காதலால்
மட்டுமேயன்றி வேரெதில் கிட்டும்
காத்திருந்தேன் அரேபியக்கப்பல்
கரை வந்து சேருமென
பிறை நிலவில்
உன்னைச் சிறை பிடித்தேன்
நட்சத்திரக் கூட்டத்தில்
பூத்துக்குலுங்கும்
விசித்திரப் பூவொன்று
சிரித்ததில் சிதறியதோ
நட்சத்திர திரள்கள்.
திரண்ட இருளாய்
என்னுள்ளம்
வரண்டு கிடக்க
காதல் தேன் பாய்ச்சிட
வந்த தேன்மலரே
கார்வானில் மறைந்த
கருவண்டாய்
வந்தேன் காதல் தேனுறிஞ்ச
முதலில் சக்தி பெற்றேன்
காதல் சொல்ல
உன்னாலே முக்தி பெற்றேன்
என் காதல் வெல்ல.
முரட்டு மீசையிடம்
முரண்டு பிடிக்குது கூந்தல்
முரண்டு பிடி திரண்டு வரும்
அது காதல்
திமிரும் புருவத்திடம்
திணறித் தவிக்குது மீசை
முரட்டு காளையே விரட்டி புடி
அது காதல்
விரல் நீள மீசையில்
வீரம் உண்டெனில்
அடி கணக்கில் வடியுது கூந்தல்
அதுவே வீரத்தின் வடிகாலோ
ஆணின் வெற்றிக்கு பின்னால்
பெண்ணுண்டு என்பதன் காரணம்
இதுதானோ !!
பெண்ணிடம் வளையாத
மீசை எங்குண்டு
ஆணிடம் திமிராத
புருவம் எங்குண்டு
சமர் புரி சம'ரசம்' குடி
தோற்று வெல்வாய்
வென்று தோற்பாய்