REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Abigeetha Dhanasekar - India
Entry No:
378
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
சர சர வென மழைச் சாரல் வேளையில்
எல்லோரும் குளிரில் நடுங்குகையில்
என்னை மட்டும் வெப்பம் அணைத்தது
ஏனோ தெரியவில்லை?
ஊரே நோயால் உயிருக்கு
போராடுகையில்
என்னை பயமோ தாக்கவில்லை
ஏனோ தெரியவில்லை?
மனதில் ஒரு வலிமை
எங்கு இருந்து வந்தது
இந்த தைரியமும் துணிச்சலும்
என்றே தெரியவில்லை?
ஆனால் மனதில்
ஏதோ ஒரு மாற்றம்....
அந்த மழைச் சாரலில் இருந்து
என்னுள் ஏதோ ஒரு
சக்தி இருப்பது போல்
ஒரு உணர்வு....
அப்பொழுது உணர்ந்தேன்
சக்தியில் பாதி சிவன் என்றும்
சிவனில் பாதி சக்தி என்றும்.....
ஒரு வேலை என்னவன்
அன்று வெப்பஉடையில்
இருந்தாணோ.....
அதனால் தான் வெப்பம்
என்னை அனைத்ததோ அன்று....
என்னவன் மிக சிறந்து
மருத்துவநோ என்னவோ
தெரியவில்லை நோய்
என்னை நெருங்கவில்லையே....
என்னவன் மிக சிறந்த
வலிமையும் தைரியமும்
மிக்க வல்லவனோ
அதனால் தானோ நானும்
வலிமை அடைந்துள்ளேனோ...
நானும் என்னவனும்
மனதால் இனைந்துவிட் டோம்
மாற்றத்தை வெளியிடமாட்டோம்
இருவரும் உணர்வால்
வாழ்வோம்....
காலம் வரும் வேளையில்
மனதை பரிமாரிக் கொள்வோம்
பின்பு அனைவர்
முன்னிலையிலும் இருவரும்
ஒன்றினைவோம்.....
இப்பொழுது இருவரும் இருவரின்
உணர்வாள் வாழ்வதில்
என்ன ஒரு சுகம்....
இந்த ஆனந்த்ததின் பெயர்
என்னவென்று
உங்களுக்கு தெரியுமா?
-அபிகீதா 👩⚕️😘