top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Aarthirani M - India

Entry No: 

315

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

நேசிப்பின் ஆழம் புரிந்தது கண்களின் சந்திப்பில்!!
காற்றோடு கலந்தாடும்
பூக்களுக்கு மத்தியில்
சந்திப்பின் ஒத்திகையின்
நிமிடங்கள் மனதில் கூத்தாடும் நா வறண்டு தழுதழுக்கும்
குரலில் சினுங்களும்
கெஞ்சலுமாய்.....
அந்த சந்திப்பின் மாலைவேளை யுகமாய் போனது என்னவோ நாட்கள் ; துளியளவும் அன்பு மாறாமல்!!!!
புறம் கண்டு பூத்து - பின்
அகம் கண்டு மேலும் மலர்ந்ததென்னவோ விந்தையே!
இடைவெளி நீள...
இக்கட்டிலும் சந்திக்க
இதயத்துடிப்போ எங்கோ போக!!!
உன்னைக் கண்ட அந்தத் தருணம் இதுதான் காதலோ??!!!!
கடைசி வரை காலம் முழுக்க காதலோடு கரை சேருவோமா? வார்த்தைகளுக்கு விடைகொடு
இப்பொழுது.....
கண்களில் கதைப்போமா?
கேள்வியுமாகி பதிலும் நானாகிறேன்!!!!!!!

bottom of page