top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
A.Keerthana Arivalagan - India
Entry No:
232
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
* *அன்புத் தங்கைக்கு*
அறியா பருவத்திலும் ஓடி வந்தேன்
உன்னை காண....
சிவப்பு ரோஜா ஊஞ்சலில்
கண்ணயர மறுத்து அழுதது...
உன் விரலை நான் தொட
இறுக்கமாக பற்றிக் கொண்டாய்
இன்றுவரை விடவில்லை...
கபடமில்லா சிரிப்பும்
பாசத்தை அள்ளித்தரும் மனமும்
செல்லக் கோபமும்
அன்பை வெளிப்படுத்தும் இயல்பும்
உன் அடையாளம்...
என் குரலிலேயே சோகம்,
சந்தோசத்தை கண்டறிவாள்...
துன்பம் என்னை சூழ்ந்தாலும்
துவண்டு விடுவாள்...
செல்லமாய் சிணுங்கி கொண்டே
அன்பைப் பொழிந்திடுவாள்...
எனக்காக எதையும் விட்டுக் கொடுப்பவள்
யாரிடமும் என்னை விட்டுத் தரா
மனம் படைத்தவள்...
விடுமுறை பின் ஊர் திரும்பும்போது
கண்ணீர் மல்க தழுவிடுவாள்...
உன் எல்லை மீறிய
அன்பு கைவிளங்கினுள்
விடுபட முடியாமல் நான்...
bottom of page