top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

இளையோன் முத்து - India

Entry No: 

172

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

எங்கோ பிறந்து
பாலுட்டு தாலாட்டி
பட்டம் வரை படிக்க வைத்து

பார்போற்றும் மணமகன்
வேண்டும் என பத்து பக்கம்
பாங்காய் விசாரித்து
என் பக்கம் வந்தது அவளின்
பிறப்பின் கட்டங்கள்

பத்து பொருத்தம் பங்காய்
அமைந்திட
பாவம் எனக்கு மலையிட்டாள்

அவள் முன்னெழுத்து என்
எழுத்தாலும்
யார் வீட்டு மகளோ
என் வீட்டு மனையாள் ஆனால்

இருபத்தி ஒரு திங்கள் காத்திட்ட
கற்பை கடுகளவு யோசிக்காமல்
களவாட அனுமதி அளித்தாள்
அவள்

மக்கட்பேறு மாதமும் வந்தது
மருத்துவமனையில் நானும்
குட்டியிட்ட பூனையாக

அவளின் அழுகுரல் அணுவை பிளந்தது
அவள் என் கைகளை பற்றி
அழுதிட்ட நொடி மரணித்தேன் நான்

பிள்ளையின் அழுகுரல் கேட்டது
பிள்ளை முகம் கண்டாள்
தன் வலி மறந்தாள்


என் மக்கட்களுக்கும்
எனக்கும் தயானாள்
அந்த பெண்மை எனும்
பெருந்தகைமை..

"""கவிஞர்: இளையோன் முத்து



bottom of page